Saturday, January 21, 2012

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்-பாகம் 2

இந்த பதிவின் முதல் பாகத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள் 


அக்பரின் அரசாங்க கல்விக் கொள்கையும் இஸ்லாமிய மார்க்க கல்வியை ஒழிக்கும் நோக்கோடு அமைக்கப்பட்டது.அரபு மொழியில் இஸ்லாமியச் சட்டம்,ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு ஆதாரவளிக்கப்படவில்லை. இக்கலைகளை கற்றோர் செல்லக்காசுகளாகவும் கீழ்த்தரமானவர்களாகவும் பிற்போக்கானவர்களாகவும் கருதப்பட்டனர்.அதேவேளை முற்றிலும் உலகியல் பயனுள்ள தத்துவவியல்,கணிதம்,வரலாறு போன்ற பாடங்களுக்கு அரசாங்கம் பேராதரவளித்தது.மொழியை பொறுத்தவரை சமஸ்கிருதப்படுத்திய ஹிந்தியை வளர்ப்பதற்குப் பேராவல் காட்டப்பட்டது.அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மார்க்க கல்விகூடங்கள் கைவிடப்பட்டன.சரியான மார்க்க அறிஞர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.


பொதுமக்களின் நிலை இதைவிட மோசமாயிற்று இந்தியாவிலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளிலும் பண்பாட்டிலும் போதிய பயிற்சி அளிக்கப் பட்டிருக்கவில்லை. தூய இஸ்லாத்தைப் பற்றி தெளிவு இல்லாதவர்களாக மாறி ஆதலால் அவர்களின் நடைமுறை வாழ்க்கை எல்லா விஷயங்களிலும் மார்க்கத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது. இந்திய முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக தோற்றத்தில் திகழ்ந்த ஈரானிலிருந்தும் குராஸானிலிருந்தும் குடியேறியவர்கள் ஒழுக்க,சமூகச் சீர்கேடுகளைத் தம்மோடு கொண்டு வந்திருந்தனர்.
இவ்விருவகை முஸ்லிம்களின் சமூக வாழ்க்கை, ஒன்றோடொன்று இணையாத இருவகைக் காலச்சாரங்களைக் கொண்ட ஒரு புதுமையான கலவையாக அமைந்தது.அதனையே அவர்கள் ‘இஸ்லாமியக் கலாச்சாரம்’ என மொழிந்தனர். அதில் சிலைவணக்கம்,இன வர்க்க பேதங்கள்,மூடநம்பிக்கைகள் போன்றவையும் அனைத்துக்கும் மகுடமாக புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரியைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கியிருந்தன.உலக ஆசைவயப்பட்ட ஆலிம்களும் சமய குருமாரும் அவற்றைப் பின்பற்றுவோராகவும் அவற்றின் மதகுருக்காளாகவும் மாறினர். மக்கள் தம் காணிக்கைகளை அவர்கள்முன் சமர்பிக்க,அவர்களோ ஆழ்ந்த மதப்பிரிவினை வேறுபாட்டுணர்வோடு அவற்றை ஆசிர்வதித்தனர்.


தனிமனித வாழ்க்கை வேறு,பொது வாழ்க்கை வேறாகத் துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக சட்டமுறைக்கும் சட்ட முரணுக்கும் மார்க்கம் விதித்துள்ள எல்லைகள் நிராகரிக்கப்பட்டன; மார்க்கக் கட்டளைகள் நடைமுறையில் மீறப்பட்டன;வாழ்க்கையின் எல்லா விஷயங்களும் மனிதர்களின் ஆசாபாசங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டன. விதித்துரைக்கப்பட்ட இஸ்லாமியக் கட்டளைகளை மறுத்துரைப்பதும் மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயங்களுக்கு பூரண சட்ட அங்கீகாரம் அளிப்பதும் சர்வசாதாரண வழக்கமாகிப் போனது.

சூஃபித்துவ அத்வைத அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சூழலுக்கு உடனே இரையாயினர் ஏனெனில் அவர்கள் தத்துவரீதியாக சூஃபிக் கொள்கையின் போதையூட்டும் செல்வாக்குக்கு இரையாகியிருந்ததோடு அக்கொள்கை பலதெய்வ வழிபாட்டுக்கு அளித்த விளக்கமானது வாழ்க்கை மற்றும் யதார்த்த நிலை பற்றிய அவர்களின் உணர்வையும் மறக்கச் செய்திருந்தது.

சூஃபிகள் மஸ்த் (மஸ்த் என்ற பாரசீக சொல்லுக்கு போதை என்று பொருள்) தில் தன் நிலைமறந்து இருந்தபோது. மார்க்க அறிஞர் அன்றைய காலகட்ட புரட்சியாளர்‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’அவர்கள் சிர்ஹிந்த் என்னுமிடத்தில் (பிறப்பு: ஹி.975(கி.பி.1563),இறப்பு: ஹி. 1034 (கி.பி 1624) பிறந்தார்கள்.அவரது காலத்தில் வாழ்ந்த பயபக்தி மிக்கவர்கள் மத்தியிலேயே வளர்ந்தார்.அவர் தம்மைச் சூழ்ந்து வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்தச் சக்தியற்றவராக இருந்தபோதும் ஈமானில் உறுதியானவராகவும் செயலில் சிறந்தவராகவும் விளங்கினார்.அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத் தூண்டிக் கொண்டிருந்தார்.

ஷேக் அஹமத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார் அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு முற்றுப்புள்ளியிட்டு ஷரீஅத்தை,மார்க்கத்தை மேலோங்கச் செய்ய மனவுறுதியோடு எதிர்த்து நிற்க முன்வந்த ஒரே மனிதர் ஷேக் அஹ்மத் அவர்கள்தான்.அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அக்கால தீய போக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப் போராடியதோடு ஆட்சியாளர்கள் விரும்பாத மார்க்கச் சட்டங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அரசாங்கம் முழு சக்தியையும் திரட்டி அவரை அடக்கியொடுக்க முயன்று சிறையிலும் தள்ளியது.இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.அக்பரின் இறப்புக்கு பிறகு அவரின் மகன் ஜஹாங்கீருக்கு அஹமத் ஸிஹிந்த் அவர்கள் தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்ய மறுத்தார் என்பதற்காக அவரைக் குவாலியர் கோட்டையில் சிறையிலிட்ட அதே ஜஹாங்கீர் ஷேக் அஹ்மத் அவர்களின் மார்க்க விளக்கத்தின் பயனாக அவரின் மாணவரானர். தம் புதல்வர் குர்ரத்தையும் மார்க்க கல்வி கற்பதற்காக ஷேக் அஹ்மத் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தப் புதல்வர் தான் பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார்.

இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடத்திய அரசாங்கத்தின் மனப்பான்மை இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது.அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக் கோட்பாடுகளும் சட்டவிதிகளும் கொண்ட அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற மதம் மறுபடியும் எழ முடியாதவாறு முடக்கப்பட்டது. இஸ்லாமியக் கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும் விலக்குகளும் தாமகவே ரத்தாகிச் செல்லுபடியாகாதவையாகி விட்டன என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி முறை முடியாட்சியாகவே இருந்ததெனினும் சமயக்கலைகளையும் ஷரீயத் சட்டங்களையும் பொறுத்தவரை அரசாங்கத்தின் மனப்பன்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.

ஷேக் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம்,முற்றாக ‘ஜாஹிலியத்தின்’(அறியாமையின்) கைகளுக்கு மறுவதை தடுத்தது மட்டுமின்றி,ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கிளம்பிய இயக்கத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளியிட்டார்.

அதைவிட மிகப்பெரிய சாதனை ‘அவ்ரங்கசீப்’ எனும் அரசக் குடும்பத்து மாணவனை உருவாக்கி விட்டு சென்றார்.ஷரீஅத்தை,மார்க்கத்தை ஒழித்துக்கட்டும் செயலில் ஈடுபட்டவருமான அக்பரின் கொள்ளுப் பேரரான ‘அவ்ரங்கசீப்’ இஸ்லாத்தின் பாதுகாவலர் ஆனார். (முற்றும்)

பின்குறிப்பு:
அவ்ரங்கசீப் பற்றி வரலாற்றுரீதியான ஆதாரங்களோடு நடுநிலையோடு எழுதப்பட்ட நூல்கள் ஏராளமாக இருக்கின்றன அதில் குறிப்பிடத் தக்கது சே.திவான் அவர்கள் எழுதிய அவ்ரங்ஜேப் அந்த புத்தகம் வேறு கோணத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது முடிந்தால் அந்த நூலை வாங்கி படியுங்கள்.

பின்குறிப்பு: 2
சென்ற முதல் பதிவில் ஆதார நூல்களை சகோதரர்கள் கேட்டு இருந்தார்கள் அவர்களுக்காக.
இஸ்லாமிய மறுமலர்ச்சி என்ற இந்த நூல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாம் தாக்கப்படும்போதேல்லாம் தோன்றி முகம் கொடுத்த ‘முஜத்தித்’ (இஸ்லாத்திற்கு புத்துயிரளித்து அசல் நிலைக்கு கொண்டு வருபவர்)களைப் பற்றிய தொகுப்பு புத்தகம்.
இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்-பாகம் 1.2
வந்தார்கள் வென்றார்கள் வரலாற்று இடங்கள்,காலப்பகுதி,ஆய்வுக்காக

25 comments:

  1. அருமையான பதிவு. அக்பரை போற்றுபவர்கள் சற்று இந்த பதிவையும் பார்க்கட்டும்.

    ReplyDelete
  2. மிக எளிதாய் அவுரங்கசீப் நல்லவர் என்பதற்கான ஒரு உண்மையை சரித்திரஆய்வாளர்களும்.ஆசிரியர்களும்மறந்து விடுகிறார்கள்

    அவுரங்க சீப் எவ்வளவு பொறுப்புள்ள மன்னன் என்பதற்கு சிறையில் அடைக்கப்பட்ட சிவாஜிக்கு கூடை கூடையாக பழங்களும்
    அவர் பூஜை செய்ய பூக்களும் அனுப்பி இருப்பார் .

    தன் எதிரியை கொள்வதுதானே மன்னர்களின் மரபு அவுரங்கசீப் அப்படிசெய்து இருந்தால் சரித்திரத்தில் சிவாஜிக்கு இவ்வளவு பெருமை இருக்காது.

    இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.ஏன் என்றால் அந்த பழ கூடைகளை பயன்படுத்திதான் சிவாஜி தப்பினார் இது வரலாறு.

    இன்னொரு உண்மை

    சிவாஜி அவுரங்க சீப் காலத்திலேயே இறந்துவிட்டார். அவர் இறந்த பின் அவர் மனைவிக்கும்,இரண்டு மகன்களுக்கும் ஆதரவு கொடுத்து இன்றைய மும்பை பகுதிக்கு அவர்களை ஆட்சியாளர்களாக்கி உள்ளார் அவுரங்கசீப்.
    இவ்வளவு செய்த அவரை என்ன சொல்வது ???
    ===================================


    இந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள். தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே! --

    இந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள்.

    இசுலாமியர்களுக்கும் வரி விதித்தான் என்கிறது வரலாற்றின் வரிகள்.

    கடவுளின் சொந்த பூமி என்கிறார்களே, அந்தக் கேரளத்தில் தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே! தலைக்கு வரி, மீசை வைத்தால் வரி, திருமணத்திற்கு வரி, இறந்தால் வரி, எந்தவிதச் சடங்கு செய்தாலும் வரி என்று விதித்தார்கள்.

    பனை மரம் ஏறினால் வரி, கள் விற்றால் வரி, வலை வீசினால் வரி, மீன் பிடித்தால் வரி என்று பிழைக்கும் வழிகளுக்கெல்லாம் வரி. பாடுபடாமல் வாழ்ந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு வரி கிடையாது. ----வ.அரசு.
    SOURCE:>> “viduthalai newspaper “ SUNDAY, MAY 12, 2007
    -----------------------------------

    CLICK AND READ

    1. >>> அவுரங்கசீப்.. !!! அவ்ரங்கசீப் மதமாற்றம் செய்தாரா? அவுரங்கசீப் இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி. <<<<


    2. >>>> ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி! <<<<<<


    .

    ReplyDelete
  3. அருமையான பதிவு bro,well done keet it up

    ReplyDelete
  4. சலாம் சகோ ஹைதர் அலி,

    இப்பொழுதான் முதல் பாகம் படித்து கமெண்ட் போட்டேன். அதுவே இன்னும் வெளியிடப்பட வில்லை. அதற்குள் பாகம் இரண்டா???? ஹ்ம்ம்.. ரொம்ப வேகம் சகோ நீங்கள்.
    ஒரு நாள் இடைவெளி விடுங்கள் சகோ. படைப்பு அனைவரையும் போய்ச் சேர வேண்டும் அல்லவா...

    மற்றபடி, பதிவு வழக்கம் போல் கலக்கல். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மிக ஆழமான அலசல், எளிய அறிமுகம். பகிர்வுக்கு நன்றி சகோ ஹைதர். ஒரு கோரிக்கை

    இஸ்லாமிய மன்ன்னாக இருந்துகொண்டே, இந்து கோயில் கடவுளை மதித்து, அக்கோயில்களுக்கு புரவலராக இருந்து, தனது தலைநகரத்தின் பெயரை இந்து மத கடவுளின் பெயரிலேயே இருக்க அனுமதித்து, தனது கோட்டை வாயிலைக்கூட கோயில் கோபுரம் மற்றும் இஸ்லாமிய கட்டிட வடிவ கலவையில் கட்டிய மார்க்க விரோதி திப்பு (சுல்தான்) அம்பலப்படுத்தியும் இதே போன்ற ஒரு கட்டுரை எழுதவும். அக்பரைப்போலவே திப்புவையும் இந்த (போலி) முற்போக்காளர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை கவனியுங்கள்

    ReplyDelete
  6. வாஞ்சூர் அப்பா,
    அஸ்ஸலாமு அலைக்கும்...

    /* சிவாஜி அவுரங்க சீப் காலத்திலேயே இறந்துவிட்டார். அவர் இறந்த பின் அவர் மனைவிக்கும்,இரண்டு மகன்களுக்கும் ஆதரவு கொடுத்து இன்றைய மும்பை பகுதிக்கு அவர்களை ஆட்சியாளர்களாக்கி உள்ளார் அவுரங்கசீப்.
    இவ்வளவு செய்த அவரை என்ன சொல்வது ??? */

    நான் அறியாத தகவல். அறியத் தந்ததற்கு நன்றி . நல்ல பயனுள்ள தகவல். உங்கல் உழைப்பு, நாங்கள் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை எங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  7. அக்பரைப்போல் அனைத்து மதங்களும் (இஸ்லாம், கிருத்துவம், இந்து மதம்) மனிதர்களால் தான் பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை அனைவரும் அறியும், ஏற்கும் காலம் வருமா?

    ReplyDelete
  8. சலாம் சகோ ஹைதர் அலி,

    மார்க்க அறிஞர் அன்றைய காலகட்ட புரட்சியாளர்‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’அவர்கள் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

    அக்பர் பற்றியும் நான் அறியாத தகவல் பல. அறியத்தந்ததற்கு நன்றி . நல்ல பயனுள்ள தகவல் தொடர். உங்கல் உழைப்புக்கு இறைவன் நரிகூலி தந்தருள துவா செய்கிறேன்.

    ReplyDelete
  9. ஒவ்வொரு காலத்திலும் ஜாஹிலிய்யாக் கொள்கைகளுக்கெதிரான நல்ல மனிதர்களை அல்லாஹ் கொண்டு வந்து இஸ்லாத்தை நிலை பெறச் செய்கிறான். ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த் புதிய தகவல். ஜஸாகல்லாஹ்

    ReplyDelete
  10. சலாம் சகோ....

    அக்பரை பற்றி நான் இதுவரை அறியாத தகவல்களை அறிந்துகொண்டேன்....நன்றி..

    ReplyDelete
  11. சலாம் சகோ....

    அக்பரை பற்றி நான் இதுவரை அறியாத தகவல்களை அறிந்துகொண்டேன்....நன்றி..

    ReplyDelete
  12. @சுவனப்பிரியன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி சகோ

    ReplyDelete
  13. @VANJOOR

    அவ்ரங்கசீப் அவர்களைப் பற்றி விரிவான விபரங்களும் சுட்டிகளும் தந்தமைக்கு
    ரொம்ப நன்றி

    ReplyDelete
  14. @Mohamed Himas Nilar

    நன்றி சகோ தொடருங்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
  15. @சிராஜ்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    இரண்டு பாகத்தையும் எழுதி விட்டு தான் முதல் பாகத்தை போட்டேன் சகோதரர்கள் ஆதாரம் கேட்டவுடன் இரண்டாம் பாகத்தி உடனே போட்டு விட்டேன் இனி கவனம் கொள்கிறேன்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  16. @இறைவன் ஒருவனே

    திப்பு சுல்தானைப் பற்றி விரைவில் பதிவிடுகிறேன் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. @VANJOOR

    சுட்டிகளுக்கு நன்றி

    ReplyDelete
  18. @R.Puratchimani

    //மனிதர்களால் தான் பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை அனைவரும் அறியும், ஏற்கும் காலம் வருமா?//

    இறைத்தூதர்கள் கொண்டு வந்த ஒரே இறைவனை வணங்கும் வழிமுறையை மனிதர்கள் மாற்றி விட்டார்கள் என்று வேண்டுமேன்றால் சொல்லாம்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  19. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~
    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    //அக்பர் பற்றியும் நான் அறியாத தகவல் பல. அறியத்தந்ததற்கு நன்றி . நல்ல பயனுள்ள தகவல் தொடர். உங்கல் உழைப்புக்கு இறைவன் நரிகூலி தந்தருள துவா செய்கிறேன்.//

    அல்ஹம்துலில்லாஹ் பிரார்த்தனைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  20. @சுல்தான்

    இறைவன் உங்களுக்கும் நண்மைகளை செய்வானாக

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  21. @NKS.ஹாஜா மைதீன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  22. சலாம் ஹைதர் அலி,

    உங்களுக்கு மைனஸ் வோட்டு போட்ட ID "haitharjunus ".

    ReplyDelete
  23. /* உங்களுக்கு மைனஸ் வோட்டு போட்ட ID "haitharjunus ". */

    ஒன்னும் பெரிய விஷயம் இல்லை..சும்மா கண்டுபிடிச்சேன்...அதான் சொல்லலாம்னு.

    நமக்கு மைனஸ் வோட்டு போடறதில தலைவருக்கு தான் முதலிடம். எங்கெல்லாம் மைனஸ் வோட்டு இருக்கோ, தலைவர் பேரு கண்டிப்பா அங்க இருக்கும். சும்மா போய் பழைய பதிவுகள்ள செக் பண்ணி பாருங்க.

    ReplyDelete
  24. Does Nepal Buddhist country before? To my knowledge that was the only Hindu country? Also why Srilankan buddhist are not like other buddhists, why do they bomb and kill 30,000 people in 4 days.

    ReplyDelete